Tuesday 30th of April 2024 01:07:36 PM GMT

LANGUAGE - TAMIL
.
10 இலட்சத்தை கடந்தது தமிழ்நாட்டு கொரோனா பாதிப்பு!

10 இலட்சத்தை கடந்தது தமிழ்நாட்டு கொரோனா பாதிப்பு!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

நேற்று (எப்-19) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 941 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 44 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்து 10 இலட்சத்து 2 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 75 ஆயிரத்து 116 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு கொரோனாத் தொற்று தொடர் அதிகரிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகஇ தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் - ஏப்ரல் 30ஆம் திகதி வரை இரவு நேர ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE